Saturday, November 12, 2011

பச்சை நிறமே பச்சை நிறமே

உடல்நலத்திற்கு உதவும் வண்ணக் காய்கறிகள்

நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களின் மூலம் நமக்குத் தேவையான சத்துப்பொருட்கள், ஊட்டசத்துக்கள் ஆகியவை கிடைக்கின்றன. இவற்றை நமது உடல் கிரகித்துக்கொள்கிறது. அதன் காரணமாக நமது ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. வுண்ணங்கள் வாழ்க்கையைஅழகாக மாற்றுவதோடு உடல் நலத்தையும் அதிகப்படுத்துகின்றன. ஆகவே வண்ணமயமான உணவை தினசரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பச்சை நிறமே பச்சை நிறமே

பச்சைக் காய்கறிகள் கீரைகள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக கண்பார்வைக் குறைவுகளை சரி செய்ய முடியும் என்பதை நாம் மூன்றாம் வகுப்பில் இருந்து படித்து வருகிறோம். ஆனால் தற்போதைய ஆராய்ச்சிகள் பல வண்ணக் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றையும் அடிக்கடி சாப்பிட்டு வாருங்கள் , உடலும், உள்ளமும் இளமையாகும் என்று புதிய தகவலை தெரிவிக்கிறது.

கொத்தவரங்காயில் எலும்பு மெலிவைத் தடுக்கும் கால்சியம் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. காபி டீ போன்ற பானங்களை அடிக்கடி அருந்திவருவதால் ஏற்படும் அதிகப்படியான பித்தத்தை கொத்தவரங்காய் போக்குகிறது. இரவில் நன்கு கண்பார்வை தெரியவும் இது உதவுகிறது.

பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கும், வேலைக்குச் செல்லும் முப்பது வயதுக்குட்பட்ட ஆண்பெண் அனைவருக்கும் பாஸ்பரஸ் உப்பு தேவைப்படுகிறது. மூளை நன்கு செயலாற்;றவும், சிந்திக்கவும் இந்த உப்பு அவசியம். இவர்கள் பச்சைப்பட்டாணியை ஒரு நாள் விட்டு ஒருநாள் குறைந்த அளவு உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். சிறு துளி பெருவௌ;ளம் என்பதைப்போல இந்த சிறிய அளவு பச்சைப்பட்டாணி வாழ்க்கையில் மிகப்பெரிய நன்;மைகளை உடல் ஆரோக்கியத்தின் மூலமாக கொண்டு வந்துவிடும்.

பசலைக்கீரையை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலமாக ஆண்களின் பிராஸ்டேட் சுரப்பிகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் விந்துசுரப்பியில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்கும் நியோக்ஸ் ஆந்தின் என்ற கூட்டுப்பொருள் பசலைக்கீரையில் அதிக அளவில் இருப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன. ஆகவே எல்லா வயது ஆண்களும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பசலைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

பச்சை நிற காய்கறிகளில் விட்டமின் ஈ சத்தும், பீட்டா கரோட்டினும் உள்ளன. இவைகள் இதயநோயை எதிர்க்கின்றன. புற்றுநோயை தடுக்கின்றன. தினமும் அவரைக்காய், பாகற்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறியோடு, பச்சை திராட்சைப் பழங்களையும் சாப்பிட்டு வந்தால் மேலே சொன்ன நோய்கள் நம் பக்கம் வராமல் சென்றுவிடும் என்பது உறுதி.

மஞ்சள் பழமே வருக

மலச்சிக்கலினால் அவதிப்படும் நபர்களுக்கு இந்த மஞ்சள் நிறம் ஒரு வரப்பிரசாதம். ஆரஞ்சு, வாழைப்பழம், அன்னாசி, முலாம்பழம் போன்ற மஞ்சள் நிறமுடைய பழங்களை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் போயேபோச்சு என்று சந்தோஷமாகச் சொல்லமுடியுமாம்.

தினசரி உணவில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறமுள்ள பழங்களையும், காய்கறிகளையும் சேர்த்து வருபவர்களுக்கு குடலில் உள்ள கழிவுப் பொருட்கள் எளிதாக வழியேறுகின்றன. மஞ்சள் நிறமுடைய பழங்களை அப்படியே சாப்பிட்டாலும் சரி, அல்லது பழச்சாறாக எடுத்து ஒரு கப் குடித்தாலும் சரி நல்ல பலனைப் பெறமுடியும்.

பழச்சாறு, அல்லது பழங்கள், இரண்டு ரொட்டித்துண்டுகள், ஒரு கப் நல்ல தயிர், ஆகியவற்றை ஒரு வாரத்திற்கு தினமும் ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் நீங்குவதோடு, மலச்சிக்கலும் தீர்ந்து விடும் . மஞ்சள் வண்ணப் பழங்கள் பசியைத் தூண்டுகின்றன, நினைவு ஆற்றலை அதிகப்படுத்துகின்றன. எனவே பள்ளி செல்லும் மாணவ மாணவியர் அதிக அளவில் மஞ்சள் வண்ணப் பழங்களை உட்கொள்வது முதல் மார்க் பெற வழிகாட்டும்.

கடலுக்கும் வானுக்கும் நீலநிறம்

வண்ணங்கள் நம்வாழ்க்கையில் பல இனிய மாறுதல்களை கொண்டுவரும். கடலும், வானமும் நீலவண்ணத்தில் காணப்படுகின்றன. நீல வண்ணம் மனஅமைதி, நிம்மதி ஆகியவற்றின் அறிகுறி. இந்த வண்ணம் நம் உடல்நலத்திற்கு பெரிதும் உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் நீலநிற வண்ணம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நாம் உண்டால் அது நமது இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும், இதயநோய்களில் இருந்து காக்கவும் செய்கிறது. இது குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து நீலம், மற்றும் வயலெட் நிறமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு செய்த பரிசோதனைகளின் முடிவில் அவர்களது இரத்தத்தில் உள்ள தீமை செய்யும் கொலஸ்டிரால் குறைந்திருந்தது. மேலும் அவர்களில் ஒரு பகுதி எண்ணிக்கையினர் எடைகூடாமலும் காணப்பட்டனர். ஆகவே உடல்எடையைக் குறைப்பதற்கும்,; இதயநோய்களைத் தடுப்பதற்கும் நீலம், மற்றும் வயலெட் நிற காய்கறிகள் மற்றும் பழங்கள் பெரிதும் உதவுகிறது என்று அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

சிவப்பு எதிரி அல்ல

சிவப்பு நிறத்தில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவி;ல் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும், சாப்பிட வேஒண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும், பசியை அதிகப்படுத்தும். உணவை வேகமாக சாப்பிட வைப்பதில் இந்த நிறம் கைதேர்ந்தது. சில புற்றுநோய்களைத்; தடுக்கும் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆண்களுக்கு ஏற்படும் விந்து சுரப்பி புற்றுநோயைத்தடுப்பதில் சிவப்பு நிற தக்காளிக்கு பெரும்பங்கு உண்டு. மேலும் இந்த நிறமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மார்புத் திசைகளை பாதுகாப்பதிலும் பங்கேற்கின்றன.

சிவப்பு நிறமுள்ள தக்காளி, பீட்ரூட், சிவப்பு மிளகாய், சிவப்பு ஆப்பிள், சிவப்பு திராட்சை, வெங்காயம், தர்)சனி ஆகியவை உடல் நலத்திற்கு மிகவும் துணை செய்கின்றன. தக்காளி மற்றும் தக்காளியில் செய்யப்பட்ட சாஸ் போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

ஆரஞ்சு வண்ணம்

ஆரஞ்சு வண்ணத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அது அழகுமட்டும் அல்ல, நமக்குத் தேவையான மருத்துவ குணங்களை ஏராளமாகக்கொண்டு இருக்கிறது.ஆரஞ்சு வண்ணத்தில் காணப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் காணப்படும். இந்தவகையான உணவு பொதுவாக கண்பார்வைக்கு மிகவும் நன்மை செய்யக்கூடியது. காரணம் இவற்றில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் அடங்கி இருக்கிறது.

ஆரஞ்சு வண்ணமுடைய பழங்கள் நுரையீரல், மற்றும் தொண்டையில் ஏற்படும் புற்றுநோய்களை தடுப்பதில் பெரிதும் உதவுகிறது. இவைகள் வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கின்றன. இதைத்தவிர இதயநோய்களினால் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன. உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்புத்திறனை ஊக்கப்படுத்துகின்றன. ஆகவே மாம்பழம், காரட், பூசனி, வள்ளிக்கிழங்கு, ஆரஞ்சு போன்றவற்றை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கின்ற பலவண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதன் மூலமாக உடல் ஆரோக்கியம் பெறலாம். நோய் எதிர்ப்புத்திறனை அதிக அளவில் அடையலாம். இளமையோடும், இனிமையோடும் ஆனந்தமாக வாழலாம். உணவுப்பொருட்களில் காணப்படும் வண்ணங்கள் பார்வைக்கு மட்டும் அழகாக இருப்பதோடு, உடல் நலத்திற்கும் துணை புரிய வேண்டும். அந்த வகையி;ல் உணவுப்பொருட்களில் சேர்க்கப்படும் செயற்கை வண்ணங்களைவிட, காய்கறிகள் மற்றும் பழங்களில் காணப்படும் இயற்கை வண்ணங்கள் மிகச் சிறந்தவை. தினசரி உணவில் இவைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் அவசியம்.

2009 01-15 _ன் ஹெல்த் ஸ்பெஷல் இதழில் வெளியான கட்டுரை

Sunday, November 6, 2011

ராட்சத பனிக்கட்டி

அறிய வேண்டிய அரிய செய்தி
Date: Tuesday, 15 Dec 2009 20:08
கடலில் மிதந்து வந்த ராட்சத பனிக்கட்டி ஒன்றில் டைட்டானிக் கப்பல் மோதி மூழ்கியது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

இப்போது இதே போல பல மடங்கு பெரிய பனிக்கட்டி ஒன்று ஆஸ்திரேலியா அருகே மிதந்தபடி வருகிறது. ஆஸ்திரேலியா மேற்கு கடற்கரையில் இருந்து 1700 கிலோ மீட்டர் தூரத்தில் மிதந்தபடி வடக்கு நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அன்டார்டிகா பனிப்பாறைகளில் இருந்து பிரிந்து இது வந்துள்ளது.

இதை நாசா மற்றும் ஐரோப்பிய யூனியன் செயற்கை கோள்கள் படம் பிடித்து உள்ளன. இது 140 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ளது. கடலுக்கு மேலே 50 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமாக இருக்கிறது. அமெரிக்காவில் நியூயார்க் நகரம் அமைந்துள்ள மான் ஹாட்டன் தீவை விட இந்த பனிக்கட்டி 2 மடங்கு பெரியதாக இருக்கிறது.

பனிக்கட்டியில் கப்பல் மோதி விடக்கூடாது என்பதற்காக இந்த பகுதியில் செல்லும் அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை அனுப்பி உள்ளனர்.

பனிக்கட்டி மெல்ல, மெல்ல உருகி கரைந்து விடும். இதற்கே 2 வாரத்துக்கு மேல் அல்லது ஒரு மாதம் வரை கூட ஆகலாம் என்று கணித்து உள்ளனர்.
நன்றி
Author: "நிரூபன் (mjniruban@yahoo.com)" Tags: "உலக எதிரொலி"
Send by mail

Tuesday, November 1, 2011

புலியுடன் உறவாடும் பிஞ்சுக்குழந்தை

ஒரு குழந்தை புலியுடன் உறவாடுகிறது அதைப்பற்றிய தகவல் இது

www.tamilcnn.com பார்க்கவும்.

உண்மையான அன்புக்கு உருவம் கிடையாது - புலியுடன் உறவாடும் பிஞ்சுக்குழந்தை

புலிகூட புன்னகைக்கிறது இந்த பிஞ்சுக்குழந்தையைப்பார்த்து, காட்டு மிருகங்களை ஈவு இரக்கமின்றி காவுகொள்ளும் புலி இங்கு பூனையாகி விட்டது.

குழந்தையும் புலியும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவ முயல்கின்றனர் குறுக்கே கண்ணாடி இருப்பதால் தங்கள் மனதுக்குள் உணர்வை பகிர்கின்றனர் இரண்டு வயது தாண்டாத இந்த குழந்தை மிருகக்காட்சி சாலைக்கு பெற்றோருடன் சென்ற போது அங்கிருந்த புலியைப்பார்த்து அந்த இடத்திலையே நின்று விட்டதாம், புலியும் குழந்தை அருகே படுத்தே விட்டதாம். ஒருவேளை முன்ஜென்ம உறவாகக் கூட இருக்கலாம்

சித்தர்களின் அற்புத சக்தி

கூடுவிட்டு கூடு பாய்தல்

போகர் சீனநாட்டிற்குச் செல்வதற்கு முன்னால் கொங்கணவர், கருவுரூரார், இடைக்காடர், சட்டைமுனி போன்ற சீடர்களோடு இருந்தார் என்று சொல்வார்கள். போகமுனிவர் சீனநாட்டில் போ-யாங் என்பவரது சீன உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்தார். சீனநாட்டிலேயே சீனராக வாழ்க்கை நடத்தி வந்தார். இவரை புலிப்பாணி என்பவரே தமிழகத்திற்கு அழைத்து வந்;தார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.

பழனியில் போகர் இருந்தபோது ஒரு நாள் அவரது எதிரில் ஒளிபிழம்பு தோன்றியது, அந்த ஒளியில் முருகப்பெருமான் காட்சி அளித்தார் நீ என்னை காணுவது போல மற்றவர்களும் கண்டு தரிசித்து பிறவிப்பயனைப் பெறுவதற்காக ஒரு கோவிலை ஏற்படுத்து, அதில் நவபாஷாணத் திருவுருவத்தை பிரதிஷ்டை செய் என்று கூறி மறைந்து விட்டார்.

முருகன் அருள் செய்தபடியே போகர் கோயிலை உருவாக்கி, அதில் நவபாஷாணங்களை தகுந்த விதத்தில் சேர்த்து முருகன் திருவுருவச் சிலை ஒன்றை வடித்து எடுத்து, அதற்கு அபிஷேகம் செய்தார். விபூதியை தனது உடம்பு முழுவதும் பூசிக்கொண்டார், பஞ்சாமிர்தத்தை அமுதமாக எண்ணி உண்டார். இவை இரண்டும் அவருக்கு அளவில்லாத ஆற்றலையும், உள்ளொளியையும் பெருக்கியது.

தனது சீடர் புலிப்பாணியை அழைத்தார், நான் மூலிகை சேகரிக்கப் போகிறேன் என்று தெரிவித்துவிட்டு ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்றார். சீன தேசம் அடைந்த அவர் பெண்களில் அழகால் கவரப்பட்டு அங்கே சில காலம் தங்கியதாகக் கூறுகின்றனர். இது எந்த் அளவிற்கு உண்மை என்பது புரியவில்லை. ஐம்புலன்களை வென்ற சித்தருக்கு பெண்பித்து பிடித்ததாகக் காட்டுவது எதைக்கருதி என்பது விளங்கவில்லை. அவர் சீன தேசத்திற்கு சென்றதற்கு இதை விடச்சிறந்த காரணங்கள் இருக்கலாம், ஆனாலும் பாமர மக்கள் தங்களுக்குத் தோன்றிய விஷயங்களையே சேர்த்து கதை திரிப்பது வழக்கம். அந்த வழக்கப்படி அவர் பெண்ணாசை கொண்டு சீனாவில் தங்கியதாக பழங்கதைகள் சொல்கின்றன.

ஆண்டு பல கழிந்தன, தன்னுடைய குரு போகர் தமிழகத்திற்கு திரும்பிவராததால் புலிப்பாணி மனம் வருந்தினார். வேறு ஒருவரை பழனி முருகப்பெருமானுக்கு பூசை செய்யப்பணித்துவிட்டு போகரைத் தேடி இவரும் ஆகாயமார்க்கமாகச்சென்றார். சீன தேசத்தில் தவசக்தி முழுவதையும் இழந்த நிலையில் போகரைக் கண்டார், மனம் வருந்தினார். தன்னுடைய குருவின் நிலைகண்டு உள்ளம் பதைத்தார், ஐயா வாருங்கள் இருவரும் இப்போதே தமிழகம் சென்று விடுவோம் என்றார்.

புலிப்பாணி என் ;தவ வலிமை அத்தனையும் இழந்து விட்டேன், இனிமேல் என்னிடம் ஆகாயமார்க்கமாக பயணம் செய்யும் ஆற்றல் இல்லை என்று தன் நிலையை விளக்கினார் போகர்.

குருவே கவலை வேண்டாம் நான் தங்களை என் முதுகின் மீது ஏற்றிக்கொண்டு பறந்து செல்கிறேன் என்ற புலிப்பாணி , போகரை முதுகில் சுமந்து கொண்டு வான்வழியாக தமிழகம் வந்து சேர்ந்தார்.

புலிப்பாணி தனது குருநாதரான போகர் பழைய நிலையை அடையவும், இழந்த தவஆற்றலை திரும்பப்பெறவும் பெரிதும் உதவி செய்தார். நெடுங்காலம் தவம் செய்த போகர் தன் பழைய ஆற்றல்கள்அனைத்தையும் திரும்பப்பெற்றார். பழனியில்; சிலகாலம் வாழ்ந்த அவர் அங்கேயே சமாதி அடைந்தார் என்று நூல்கள்தெரிவிக்கின்றன. அவரது சமாதி பழனி ஆண்டவர் கோயிலின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இருக்கிறது.