Friday, August 12, 2011

குடை எடுத்துக்கொண்டு

குடை எடுத்துக்கொண்டு

நேற்று தான் மும்பையில் இருந்து வந்தேன். நாற்பத்து மூன்று நாட்களுக்கு முன்னால் முன்பதிவு செய்தும் கூட ஆர் ஏ சி தான். வண்டியில் ஏறி உட்கார்ந்ததும் சோதனையாக தூக்கம் வந்தது. பெர்த் இல்லாத போது மட்டும் இந்த தூக்கம் எப்படித் தான் வருகிறதோ ?

நாம் உஷாராக குடை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினால் மழை வராமல் கடுப்பேத்தும், ஆனால் வராது என்ற குருட்டுத் தைரியத்தில் வெள்ளை உடையில் கிளம்பினால் மழை வந்து ஆடைகளை நனைப்பதோடு, சேறும் சேர்ந்து முகத்தில் கரியைத்தடவும் அல்லவா அதைப்போன்ற நிலை தான் இது.

எப்படியோ அட்ஜஸ்ட் செய்து கொண்டு புனா வந்த பிறகு பெர்த் கிடைத்து விட்டது. வாழ்க டி டி ஆர்